Saturday, March 1, 2014

ஏணியின் முதல்படி

ஏணியின் முதல்படி
முயற்சித்தது
எப்படியாவது மேலே
செல்வதற்கு...

சுறுசுறுப்பு

சோம்பேறிக்கு வெறுப்பு
உழைப்பவருக்கு விருப்பு
அது சுறுசுறுப்பு

வியர்வை

பணக்காரர்களுக்கு எதிரி
ஏழைகளுக்கு சொத்து
வியர்வை...

தாகம்

தாகம் என்ற தேனிக்கு
காலையில் தேன் தந்த மலர்
மாலையில் வாழ்வின்றி வாடியது

விளைச்சல் நிலம்

வானத்தின் கண்ணீரால்
செழிக்கும் பூமியை
விளைச்சலுக்காய் மறுத்து
விலைக்கு விற்பர் அற்பர்கள்

சுயநலவாதி

கருவிலேயே எட்டி உதைத்தான்
பூமிக்குள் தனக்காய் வாழ
தாய்க்காய் எப்படி வாழ்வான்?

தாயும் - மகனும்

தாயும் - மகனும்

கரு உறைய
ஊன் குறைத்து
உடல் மெலிந்து
சதை பிடிக்க
பக்குவமாய் பார்த்து
பத்துமாதம் காத்து
பெற்றவள் தாய்...

பகட்டுக்காய்
பலரோடு சேர்ந்து
புகைபிடித்து
மதுவுடன் மாதுவும் சேர
மயக்கத்தில் வீழ்ந்து
தன்னை அழிக்கும்
முட்டாள் மகன்

காலண்டர்
காலத்தை டர் என்று கிழிப்பதால் காலண்டர் ஆனதோ