Monday, January 2, 2012

எதைத் தேடி....

கோவிலுக்குள் செல்லும்
ஊனமுற்றவன்...
அவன்மேல் பரிதாபத்தில்
விநாயகர் படம் கொடுக்க
காசுகேட்பான் என்று
விநாயகரை மறுத்து
கோவிலுக்குள் எதைத்
தேடிப் போகிறான்..

கவிதை

வார்த்தைகளின் கனவுகளை
கருத்தரிக்கும் சொல்... கவிதை

வரதட்சணை

நிலவுப்பெண்ணை மணக்க
வானம் கேட்ட வரதட்சணை
விண்மீன்கள்

உறவுகள்

நம் உறவு வேண்டுமென
எத்தனை எத்தனை உயிர்கள்
தன்னை மாய்த்துக் கொள்கிறது....
கீரையிலிருந்து கூரை வரை
ஆனால்....
புரியாதவர்களாய் நாம்
சுயநலவாதியாய் திரியும்
மனிதர்களை மட்டும்
உறவுகளாய்த் தேடி....

வசந்தம்

நான் வாடிய போதெல்லாம்
வாழ்க்கையில் வீசியது.....
தன்னம்பிக்கை என்ற பெயரில்
வெற்றியின் வசந்தம்

அம்மா

என்னை அவதரிக்க
மட்டுமல்ல....
என்னுள் நான் இனித்திருக்க
எத்தனை கஷ்டப்பட்டவள்

வாழ்க்கை

எனக்காக அவதரித்த உலகம்
அதில் வாழும் வசந்தத்தைக்
கற்றுக்கொடுப்பதற்காக
எத்தனை பாடுபடுகிறது..............
என் மரணம் வரையில்

இனிக்கும் நிலவினிலே,,,,

இயற்கையும் உறங்காத
பொழுதினிலே.....
இனிமைகளை தேடிய
நாட்களிலே....
இரவுகள் மட்டும்
என்னை மலரச் செய்தது
வானத்தில் இருண்டபோதும்
ஒளியாமல் ஒளிந்த
இனிக்கும் நிலவினில்
என் மனம் விரும்பும்போது....