Saturday, March 1, 2014

தாயும் - மகனும்

தாயும் - மகனும்

கரு உறைய
ஊன் குறைத்து
உடல் மெலிந்து
சதை பிடிக்க
பக்குவமாய் பார்த்து
பத்துமாதம் காத்து
பெற்றவள் தாய்...

பகட்டுக்காய்
பலரோடு சேர்ந்து
புகைபிடித்து
மதுவுடன் மாதுவும் சேர
மயக்கத்தில் வீழ்ந்து
தன்னை அழிக்கும்
முட்டாள் மகன்

No comments:

Post a Comment